இன்று உலக செவிலியர் தினம் கொண்டாடம்.. "நைட்டிங்கேல்" சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த செவிலியர்கள்

0 199

கை விளக்கு ஏந்திய காரிகை என்று போற்றப்படும் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான இன்று உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள "நைட்டிங்கேல்" சிலைக்கு செவிலியர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தஞ்சை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர்கள், மருத்துவமனை வளாகம் முன்பு நைட்டிங்கேல் உருவப்படம் முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றி உறுதிமொழி ஏற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், செவிலியர்களுக்கு பூ கொடுத்து மருத்துவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் படத்திற்கு செவிலியர்கள் மலர் தூவி மரியாதை செய்து உறுதிமொழி ஏற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments